Thursday 2nd of May 2024 01:04:25 AM GMT

LANGUAGE - TAMIL
-
கோப்பாயில் சைக்கிள்  திருட்டில் ஈடுபட்ட  மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

கோப்பாயில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் நிறுத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளை திருடிவந்த திருட்டு சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூவராலும் திருடிய 25க்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரின் விசேட அதிரடி நடவடிக்கையின் போது திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. துவிச் சக்கர வண்டிகளை பறிகொடுத்தவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து அவற்றினை அடையாளங்காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் திருட்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் முப்பது சைக்கிள் திருட்டு சம்மந்தமான முறைப்பாடுகள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கோப்பாய்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE